தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் (TNTJ) சார்பில் இரத்ததான முகாம்
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில் கொரனோ 3-ம் அலையில் உயிர் காக்கும் உன்னத சேவையாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சிபுரம் கிளை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்திய 30-வது மாபெரும் இரத்ததான முகாம் கிளை தலைவர் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட மருத்துவ அணி சர்புதீன்,மாவட்ட செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலையில் காந்தி சாலை பெரியார் தூண் பாரூக் சில்க் டிரேடர்ஸ் அருகில் நடைபெற்றது.
கொரோனா காலத்தில் இரத்த பற்றாக்குறை காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாதி மத பேதமின்றி இரத்ததானம் வழங்கி மனித உயிர் காக்க தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
இந்நிகழ்வில் இரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை உடனிருந்தார்.
No comments
Thank you for your comments