கோவையில் வீடு வீடாக பூத் சிலிப் விநியோகம்... ஆணையர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குப்பதிவு நாள் 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் சாய்பாபா காலனி. கே.கே.புதூர், பீளமேடு, பயனீர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ராஜ கோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது, மண்டல உதவி ஆணையர்கள் சரவணன்,செந்தில்குமார் ரத்தினம், மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments