படப்பை குணாவின் நெருங்கிய நண்பர்களை தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்.... உயர் ரக சொகுசு கார்கள் பறிமுதல் பறிமுதல்...
படப்பை குணாவின் நெருங்கிய நண்பர்களை தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் உயர் ரக சொகுசு கார்கள் பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஆதனஞ்சேரியை இறந்த பெண் ஒருவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம் படப்பை வஞ்சுவாஞ்சேரியில் உள்ளது.
அந்த நிலத்தை மதுரமங்கலத்தை சேர்ந்த ரவுடி குணா தனது நண்பருக்கு எழுதி கொடுத்துவிடு என்று கூறி அப்பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பெண் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக படப்பை குணா மீது மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியான படப்பை குணாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
அதன்பின் ஜாமினில் வெளியே வந்த படப்பை குணா தலைமறைவாகினர்.
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகள் அடக்கமாகும்.
இந்நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், தன் உயிருக்கு பயந்து கடந்த மாதம் 25-01-2022 அன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்பு ஆஜரானார் .
இதைத்தொடர்ந்து கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட படப்பை குணா மீது பல்வேறு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை தூசிதட்டி தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், படப்பை குணா நண்பர்கள் போந்தூர் சேட் மற்றும் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபு இவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு தனியார் கம்பெனியில் மேன் பவர் சப்ளை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் படைப்பைக் குணா உடன் சேர்ந்து தொழிற்சாலைகளை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை குழுவினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். .
படப்பை குணாவிற்கு நெருக்கமாக இருந்த நபர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள் என கூறப்படுகிறது. தற்போதுவரை குணாவிற்கு ஆதரவாகவும் குணா வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட தொடர்புடைய நபர்களை வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து பல்வேறு காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகிறார்கள்.
ஆனால் பிடிபட்ட நபர்கள் மறுநாளே பிணையில் வெளி வந்து விடுகிறார்கள். இதனால் முழு விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக தனிப்படை போலீசார் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு கொலை வழக்கில் தொடர்புடைய படப்பை குணாவின் மனைவியை தனிப்படை போலீஸார் அதிகாலை தூக்கினார். ஆனால் மாலையே விடுவிக்கப்பட்டார்.
அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தென்னரசு படப்பை குணா வழக்கில் தொடர்புடைய நபர் என தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தவர் மறுநாளே ஜாமீனில் வெளியேறிவிட்டார்.
No comments
Thank you for your comments