ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு
வேலூர், பிப்.2-
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த 66 புதூர் பகுதியில் உள்ள ஏரிக்கு அருகே ஐம்பொன் சிலை ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை எஸ்.ஐ., ராஜசேகர் உட்பட அங்கு சென்ற காவல்துறையினர் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன் அம்மன் சிலையை மீட்டனர். மேலும் இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என்றும் இது கடத்திவரப்பட்டதா இதை கடத்தியவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments