6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு டே.அகிலாண்டேஸ்வரி வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
46வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் டேவிட் என்கிற வல்லரசு வேட்பாளர் டே.அகிலாண்டேஸ்வரி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. மேலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. மேலும் வருகின்ற 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யவும், 7ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறவும் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணத்தால் தேர்தலில் போட்டியிடுவோர் நிலுலையில் உள்ள தங்கள் வரிகளை செலுத்தி வந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் 51 வார்டுகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்கவுள்ளது. இதனால் மாநகர பகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் மாமன்ற உறுப்பினர் பதவியில் களம் காண போட்டி போட்டுகொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் டேவிட் என்ற வல்லரசு அவர்களின் மனைவி டே. அகிலாண்டேஸ்வரி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாநில துணை செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆத்திகுளம் சேகர் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் அணி தாடி கார்த்திகேயன் மாவட்ட இளைஞரணிஅமைப்பாளர் ஓரிக்கை ஏழுமலை இளவழகன் ஸ்டாலின் உதயா ஆட்டோ பாட்ஷா ஒன்றிய துணைச் செயலாளர்கள் மட்டும் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments