Breaking News

திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது ....மக்களை நேரில் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது...

காஞ்சிபுரம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தெருக்களில் பிரசாரம் செய்தால் மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் மக்களை திமுக அரசு நேரில் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்று காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளர்களை ஆதரித்து 7.2.2022 முதல் 15.2.2022 தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


அதன்படி முதல்கட்ட பிரச்சாரமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு  உட்பட்ட அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தனியார் திருமண மண்டபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் 

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசியதாவது

திமுகவின் சுய உருவத்தை மக்கள் அறிந்து கொண்டார்கள்... மக்கள் தற்போது வருத்தம் அடைந்து இருக்கிறார்கள்... அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செய்துவிட்டார்கள்... 

பொங்கல் பரிசுத் தொகை முதன்முறையாக 300ரூபாய் வழங்கியது அதிமுக அரசு அதன் பிறகு ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது அதன்பிறகு இரண்டாயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு... 

திமுகவினர் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள எதையுமே பயன்படுத்த முடியவில்லை இப்படிதான் கேடுகெட்ட ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்து புரிந்து உள்ளார்கள் 

முடியவும் இல்லை... நல்லாட்சி தரவும் இல்லை... மக்களை திமுக அரசு நேரில் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது 

தெருக்களில் பிரசாரம் செய்தால் மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் 

மக்களுக்கு என்ன தேவையோ அதை அதிமுக அரசு வழங்கியது காவிரி பிரச்சினை முல்லைப்பெரியாறு பிரச்சினை வரைந்து அவற்றை காப்பாற்றிய அரசாக அதிமுக அரசு உள்ளது .

அப்போது 17 ஆண்டுகாலம் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும். ஆனால் அது தற்போது பெரிய விவாதப் பொருளாக உள்ளது... நீட் முதல் முதலில் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த காந்திசெல்வன் அதை நாடாளுமன்றத்திலும் மக்களவையிலும் கொண்டு வந்தார் 

தற்பொழுது நீட் ரத்து செய்ய வேண்டும் என்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எடப்பாடி ஆட்சியில் ஐம்பத்தி ஒரு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ சிகிச்சை தற்போது பயின்று வருகிறார்கள் 

திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது திமுக ஆட்சியில் அவல நிலையை மக்கள் தற்போது நன்கு அறிந்திருக்கிறார்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள்  தீர்ப்பை அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் முழுவதும் 100% தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும்..

 

காவேரி பிரச்சனையை தீர்க்க 17 ஆண்டுகாலம் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை 

அனைத்து கட்சி உறுப்பினர்களும் கடமை உணர்வோடு  வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க மிகவும் கடுமையாக பணியாற்ற வேண்டும் அதிமுகவை தாங்கி நிற்கும் சக்தி தொண்டர்கள் தான் எனவே தொண்டர்களை ஜெயிக்க வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் .

தொண்டர்களின் முகத்தில் வெற்றிப் புன்னகை தெரிகிறது அதை என்னால் உணர முடிகிறது 50 சதவீதம் தாய்மார்கள் தான் வேட்பாளராக போட்டியிடுகின்றார் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

தொண்டர்கள் படிப்படியாக முன்னேறி மேடையில் அமர்வதற்கான வாய்ப்புள்ள ஒரே கட்சி அதிமுக தான்.. அசாதாரணமாக கடுமையாக உழைத்தால் என்னை போல் முதலமைச்சராக வர முடியும் தற்போதைய தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நாம் யார் என்பதை காட்டி ஆக வேண்டும் கடந்த பத்து மாத ஆட்சி காலத்தில் கெட்ட பெயர் வாங்கிய ஒரே அரசு திமுக அரசுதான் இவை எல்லாம் நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும்.  இவ்வாறு கூட்டத்தில் உரையாற்றினார்.

No comments

Thank you for your comments