Breaking News

குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினைதொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்   தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி  இன்று (27/02/2022) தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வ பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு.பிரியா ராஜ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments