டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவியதற்கு அமைச்சர் சு.முத்துசாமிக்கு நன்றி தெரிவிப்பு..
ஈரோடு:
ஈரோட்டில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவியதற்கு, தலித் விடுதலை கட்சியின் சார்பாக சமூக நீதிப் போராளி டாக்டர். எம் பி செங்கோட்டையன் நன்றி தெரிவித்தனர்..
நீண்ட கால கோரிக்கையை ஏற்று ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தலித் விடுதலை கட்சியின் சார்பாக சமூக நீதிப் போராளி டாக்டர். எம் பி செங்கோட்டையன் தலைமையில் 23.02.2021 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மாநில அமைப்பாளர் வெ ஆறுமுகம் மற்றும் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments