Breaking News

வேலூரில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வு!.. முதலமைச்சரிடம் வாழ்த்து...

வேலூர், பிப்.6-

வேலூர் மாநகராட்சி 1- வது மண்டலத்துக்குட்பட்ட 8-வது வார்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த சுனில்குமார் என்பவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதையடுத்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி பிப்.4ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது.  இதையடுத்து சனிக்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. 

இதேபோன்று, காட்பாடியில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில்  நேற்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. 8-வது வார்டில் அதிமுக சார்பில் சுரேஷ்குமார், பாமக சார்பில் நாயுடு பாபு (எ) ராமச்சந்திரன், பாஜக சார்பில் ராஜா தியாகராஜன் உட்பட்ட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து சுனில்குமார் போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதாக சனிக்கிழமை அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் முதல் முறையாக திமுகவை சேர்ந்த சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து சுனில்குமார் வாழ்த்து பெற்றார்.

No comments

Thank you for your comments