வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சிறுவர்கள்
கோவை, பிப்.10-
கோவை மாவட்டம் அவிநாசி சாலை அமைந்துள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது.
ஏராளமான சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் மற்றும் 14 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த வார்டனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments