32-வது வார்டு மாமன்ற உறுப்பினரை ஆதரித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பு...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 32-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.கே.பி. சாந்தி சீனிவாசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து 32வது வார்டுக்கு உட்பட்ட ஏ.கே.டி.தெரு, ரங்கசாமி குளம், கீரைமண்டபம் செல்லும் சாலை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் வட்ட செயலாளர் சங்கர், வட்ட பிரதிநிதி எம்.ஆர்.ரவி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், உள்ளிட்ட திமுகவினரும் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments