Breaking News

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் நாள் (Petition Mela)... பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு

கோவை:

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்தரவின் பேரில், அனைத்து உட்கோட்டத்திலும்  மக்கள் குறைதீர்க்கும் நாள் (Petition Mela) நடத்தப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. 

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் 47 மனுக்கள்,

பேரூர் உட்கோட்டத்தில் 56 மனுக்கள்,

கருமத்தம்பட்டி  உட்கோட்டத்தில் 67 மனுக்கள்,

பொள்ளாச்சி  உட்கோட்டத்தில் 15 மனுக்கள்,

வால்பாறை உட்கோட்டத்தில் 09 மனுக்கள்,

மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் 53 மனுக்கள்  மற்றும் 

மாவட்ட குற்றப்பிரிவில் 11 மனுக்கள்,

ஆக மொத்தம் 258 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் சனிக்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் (Petition Mela) நடத்தப்பட்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments