கொரனோ 3-ம் அலையில் உயிர் காக்கும் உன்னத சேவை...
காஞ்சிபுரம்:
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போல் ஆவார்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சிபுரம் கிளை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்திய 28வது மாபெரும் இரத்ததான முகாம்...
இறைவனின் மாபெரும் கிருபையினால் 09.01.2022 ஞாயிறு அன்று ஒலிமுஹமதுபேட்டை தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.
கொரோனா காலத்தில் இரத்த பற்றாக்குறை காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாதி மத பேதமின்றி இரத்ததானம் வழங்கி மனித உயிர் காக்க தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
சர்புதீன்- மாவட்ட மருத்துவ அணி மற்றும் அன்சாரி-மாவட்ட செயலாளர் முன்னிலையில், கிளை தலைவர் முஜிபுர்ரஹ்மான், செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் பாசில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை பங்கேற்றார்.
No comments
Thank you for your comments