Breaking News

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கல்...கார், 17 கிலோ புகையிலை பறிமுதல்...

கோவை :

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம்  உத்தரவின் பேரில்  மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இதுகுறித்து, கோவை மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில்  துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.பி நகர், பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக துணை காவல் கண்காணிப்பாளர்  ராஜபாண்டியன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த, எஸ்.பிநகர், கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரது மகன் குமார்(41) என்பவரை கைது செய்தனர்.

மேலும்  பதுக்கி வைத்திருந்த சுமார் 17 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை மற்றும் கார்-1 பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

No comments

Thank you for your comments