Breaking News

நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பில் மதத்தினை காரணமாக காட்டி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பதும் 161 சட்ட பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களை தமிழக அரசு நேரடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சா. சால்டின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகபப்பேட்டை வேலூர் சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சா.சால்டின் தலைமையில், 

இருபது வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை மதத்தை காரணம் காட்டி விடுதலை செய்ய மறுப்பதை கண்டித்தும், 161வது சட்டப் பிரிவை பயன்படுத்தி ஏழு தமிழர்களை தமிழக அரசு நேரடியாக விடுதலை செய்யக் கோரியும், இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிரதீஸ்வரன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், காஞ்சி சரவணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் கேசவன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் மணிமாறன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொருளாளர் குமரேசன் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள், தொண்டர்கள்  என திரளாக கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments