குற்ற செயலில் பயன்படுத்திய உரிமை கோராத வாகனங்கள் 04-01-2022 அன்று ஏலம்...
காஞ்சிபுரம்:
காஞ்சியில் களவாடப்பட்ட மற்றும் குற்ற செயலில் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை உரிமை கோராத வாகனங்களை ஜனவரி 4ஆம் தேதி ஏலம் விடப்படும் என காஞ்சிபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களில் உள்ள காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட, யாரும் உரிமை கோராத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
அவ்வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப்படை மைதானத்தில் 1858 இரு சக்கர வாகனங்கள் காட்சிபடுத்தபட்டுள்ளது.
இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டும் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதாலும், வாகனங்களை யாரும் உரிமை கோரவில்லை என்பதாலும், தொடர்ந்து காவல் நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் வாகனங்கள் தொலைத்தவர்கள் தங்கள் வாகனம் என உரிய ஆவணங்களுடன் காவல்துறையிடம் சமர்ப்பித்தால் வாகணங்கள் திருப்பித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் வராததால் அதனை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மைதானத்தில் உள்ள 1858 வாகனங்கள் ஜனவரி 4-ஆம் தேதி பொது ஏலம் விடுவதற்கு அறிவிப்பை தொடர்ந்து அன்று காலை பொதுமக்கள் 1000 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி ஏலத்தில் பங்கேற்கலாம், ஏலத்தின் பங்கேற்று வாகனங்கள் வாங்க வில்லை என்றால் டோக்கன் பணம் ஆயிரம் ரூபாய் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments