Breaking News

வெறிநாய்களால் பலியாகும் கால்நடைகள்! - அலறும் மக்கள்!

நாமக்கல், ஜன. 2-

கட்டுப்படுத்த இயலாத நாய்களில் பலவற்றிற்கு வெறி பிடித்துள்ளதால் ஆடு மாடுகளை பிடித்து கடித்து குதறி வருவதால் பரமத்திவேலூர் வட்ட மக்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். 

கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள பெரிய சோளிபாளையம் ஊராட்சி, சின்ன சோளிபாளையத்தில் வசித்து வருபவர் பழனியம்மாள். இவரது மகனும் விவசாயிகள். இவர்கள் வளர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை ஊருக்குள் கும்பல் கும்பலாக சுற்றி வந்துகொண்டிருந்த நாய்கள் கடித்து குதறித்தள்ளிவிட்டன. 

நாய்கள் வேட்டையாடியதில் சம்பவ இடத்திலேயே சுமார் 5க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. அதே போல் அதே பகுதியை சேர்ந்த விவசாயி வீட்டிலும் ஆடுகளை கடித்துக் குதறி உள்ளன. இவ்வாறு நாய்க்கடி பட்டு  பல ஆடுகள் இறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இன்று (2-1-2022) அமாவாசை மற்றும் ஞாயிறு என்பதால் கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால் முதலுதவி அளிக்க வழியில்லாமல் ஆடுகள் இறந்து விட்டதாகவும்  புலம்புகின்றனர் பொதுமக்கள். 

இதே போல பரமத்தி வட்டார நடந்தையை அடுத்த பெரிய சூரம்பாளையம்  கிராமத்திலும் நாய்க்குட்டிகள் மற்றும் பூனைக்குட்டிகள், ஆடுகளை கடிதத்தில் பல பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனால் பலர் வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நாய்கள் குறித்து தகவல் தெரிவித்தும் உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனைப்படுகின்றனர் பொதுமக்கள். 

இங்கு மட்டுமல்ல பல கிராமங்களில் நாய்களுக்கு வெறிபிடித்து ஆடு மாடு பூனை மற்றும் மனிதர்களை கடித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

No comments

Thank you for your comments