கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணி!
வேலூர், ஜன.10-
வேலூர் பாகாயம் காவல் நிலையம் சார்பில் இருசக்கர வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொரோனா விழிப்புணர்வு பேரணி வேலூர் பாகாயம் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு, தொரப்பாடி, சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் பகுதி வழியாக விழிப்புணர்வு பேரணி சென்று மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த கொரோனா விழிப்புணர்வு பேரணிக்கு பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா முன்னிலை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், முதல் நிலை காவலர்கள், தலைமை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என 30க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மீண்டும் கைகளில் கிருமிநாசினி திரவம் தடவ வேண்டும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்று உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பயனுள்ள தகவல்களை இருசக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமாக கேட்டனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டனர்.
No comments
Thank you for your comments