ஆட்டுப்புத்தூர் கிராம ஊராட்சியில் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்..
காஞ்சிபுரம் :
தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை வழங்கி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்டுப்புதூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்டுப்புத்தூர் கிராம ஊராட்சி மன்றத்தில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி 21 பொருள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஆட்டுப்புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்டுப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா மோகன் ஏற்பாட்டில் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன் முன்னிலையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கப்பட்டது.
இந்நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வேதாச்சலம் ஒன்றியக்குழு உறுப்பினர் தாமோதரன் இணை கழகச் செயலாளர் வரதராஜ், மாசிலாமணி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments