Breaking News

கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு

வேலூர், ஜன.10-

தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை தொடர்ந்து வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவ மனை எதிரே உள்ள காந்திரோடு பாபுராவ் தெரு கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் நேற்று (09-01-2022) ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 முதல் 250  வரை உள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக நம்முடைய மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு சுமார் 3500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆலோசனையின்படி, லேசான நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்கள்  மருத்துவ குழுவிடம் பரிந்துரைப் பெற்றுதங்கள் வீட்டிலேயே தனி அறை மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்தி தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும், அதிகமாக கொரோனா நோய்த்தொற்றினால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் வெளி மாநிலத்திலிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு 500 முதல் 1000 வரை நோயாளிகள் வருகைப்புரிவதால் தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளது. எனவே, வெளி மாநிலங்களிலிருந்து சாதாரண நோய்களுக்கு சிகிச்சைக்காக வருபவர்களை மருத்துவ மனைகளிலும், விடுதிகளிலும் அனுமதிக்க வேண்டாம் எனவும், இந்த பகுதிகயில் பொதுமக்கள் வெளியில் வந்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வட்ட அளவிலும், கிராம அளவிலும் வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. மேலும் அலுலவலர்கள் சுழற்சி முறையில் கிராமங்களுக்கு சென்றுவருவார்கள். இதனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குவர தேவையில்லை எனவும்,  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்து, அந்தந்த வட்டங்களிலும், ஒன்றியங்களிலும் விவசாயிகளின் கோரிக்கைள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவையான பால், மருந்து பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனுமதிக்கப்படுகிறது. இவற்றையும் மீறி வெளியில் வரும் பொதுமக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் சோதனை செய்யவும், தேவைப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது மாநகர நலஅலுவலர் மரு.மணிவண்ணன், மாநகராட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள்உள்ளனர்.

No comments

Thank you for your comments