Breaking News

அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் நகர்புற வாக்காளர் பட்டியல் வெளியீடு..

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்காடு, குன்றத்தூர் பகுதியின் நகர்புற வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி இன்று  வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் விரைவில் நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி  வாக்காளர் பட்டியலை ஏற்கனவே வெளியிடபட்டன.

இந்நிலையில், விரைவில் வர இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  இறுதி வாக்காளர் பட்டியல்   இன்று வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சி வாக்காளர் பட்டியலை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் எம்.ஆர்த்தி,  இன்று வெளியிட்டார்.

திமுக சார்பில் மாங்காடு நகர செயலாளர் பட்டூர், ஜபருல்லா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள், அதிமுக சார்பில் ரங்கநாதன், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அதன் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில்  இன்று வெளியிடப்பட்ட மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சியில் வாக்காளர் பட்டியலின் படி 39,605 ஆண் வாக்காளர்களும், 40,753 பெண் வாக்காளர்களும், 21 இதர வாக்காளர்களும் என மொத்தம் 80,380  வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் குன்றத்தூர் நகராட்சியில் 44,026 வாக்காளர்களும், மாங்காடு நகராட்சியில் 36,354 வாக்காளர்கள் உள்ளனர். 

மேலும் இந்த இறுதி வாக்காளர் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும், பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி  வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என  காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  டாக்டர் எம் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments