முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு!
வேலூர்,ஜன.10-
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த பணிகளை காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி கண்காணித்து தொய்வின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவலர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி சென்றார். இதையடுத்து காட்பாடி காவல் ஆய்வாளர் பொறுப்பு சுப்பிரமணி காட்பாடி காவல் கோட்டம் முழுவதும் தனது வாகனத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டார்.
அப்போது காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர்கள், முதல் நிலை காவலர்கள், போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குறிப்பாக வாகனங்களை தடை செய்யாமல் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அத்துடன் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை அழைத்து முகக்கவசம் அணிய வேண்டும். அதிலும் குறிப்பாக மூக்குக்கு மேல் அணிய வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்றும் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வாளரின் பணிவான பேச்சைக் கேட்ட பொதுமக்கள் இனி தேவை இன்றி நாங்கள் வெளியில் வர மாட்டோம் என்று உறுதி அளித்து சென்றனர். பல்வேறு தேவைகளுக்கு வெளியில் வர வேண்டியதுதான், ஆனால் தேவையே இல்லாமல் ஊர் சுற்றி பார்ப்பதற்காக வெளியில் வரக்கூடாது என்று தகுந்த அறிவுரைகளை வழங்கி வாகன ஓட்டிகளை உடன் அனுப்பி வைத்தார் ஆய்வாளர் சுப்பிரமணி.
No comments
Thank you for your comments