ஞாயிறு ஊரடங்கு எதிரொலி... பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் எடுக்க ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்...
காஞ்சிபுரம்
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் நிலையில் பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் எடுக்க இன்று காஞ்சிபுரம் காந்தி சாலையில் குவிந்த மக்கள் கூட்டம்.
ஒரே நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால் சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமம், போக்குவரத்து பாதிப்பு.
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் புத்தாடைகள் எடுத்து அணிவது வழக்கம்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படுகிறது.
முழு ஊரடங்கு உத்தரவை ஓட்டி அனைத்து கடைகளும் வணிகர் நிறுவனங்களும் நாளை செயல்படாது.
அதன் காரணமாக பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொது மக்கள் புத்தாடை எடுக்க இன்று காஞ்சிபுரம் நகர பகுதியில் உள்ள ஜவுளி கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
அதிக அளவில் பொது மக்கள் ஒரே நேரத்தில் புத்தாடைகள் எடுக்க குவிந்ததால் காந்தி சாலை முழுவதும் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் விதிமுறைகளை பின்பற்றாமல் கூடியதால் நோய் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
No comments
Thank you for your comments