Breaking News

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்... பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை...

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அபாய ஒலி  ஒலித்தவாறு முக்கிய சாலைகளில் வலம் வந்து தேவையின்றி சுற்றி வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, ஊரடங்கு அவசியத்தை வலியுறுத்தினார்.



நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் எதிரொலியாக தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்துள்ளது.  

வாரத்தில் மூன்று நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி ரத்து இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுபாடுகள் அமலில் உள்ள நிலையில் நேற்று முழு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.


காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெருமந்தூர்  என மாவட்டம் முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சில நபர்கள் மட்டுமே ஊரடங்கின் போது வெளியே வருகின்றனர் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து நெரிசலுடன் காணப்டும் காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அபாய ஒலி    ஒலித்தவாறு முக்கிய சாலைகளில் வலம் வந்து தேவையின்றி சுற்றி வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments