ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா கைது..
கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 31.12.2021ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த புகார்தாரர் ஒரு YouTube channel நடத்தி வந்துள்ளார். அதில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டேட் வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுப்புலட்சுமி(எ) ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் Surya Media மற்றும் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா நடத்தி வரும் Singer Sikka Official என்ற YouTube Channel களில் புகார்தாரரை பற்றி மிகவும் இழிவாகவும் ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும் இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா என்ற சிக்கா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரை பெற்று கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 354(A), 354(D), 509, 109 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள் 66(D), 67 IT ACT 2000 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சட்டப்பிரிவு 4 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கு சம்பந்தமாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர் இ.கா.ப., உத்தரவின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். எம்.எஸ். முத்துசாமி இ.கா.ப., அறிவுரையின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஹாசினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. எஸ். ஜெயதேவி மற்றும் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சகிதம் 4ஆம் தேதி மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்களை ஆய்வுக்காக கைப்பற்றியும் கைதிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும் இவர்கள் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்களது YouTube Channel களை முடக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்று சமூக வலைத்தளத்தில் சமூக நலனையும் இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிவோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார்.
No comments
Thank you for your comments