Breaking News

ரோட்டில் கிடைத்த மணி பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு...

காட்பாடி :

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில்  31-12-2021  அன்று பிற்பகல் 12:45 மணியளவில் தனபாக்கியம் திருமண மண்டபம் அருகில்  லட்சுமி என்பவர் நடந்து சென்று கொண்டு இருந்தார்.  


அப்பொழுது கீழே  இருந்த ஒரு மணி பர்ஸ் கிடைத்தது.  லட்சுமி என்பவர் உடனே அருகில் உள்ள விருதம்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மனோகரனிடம் ஒப்படைத்தார்.

உடனே மணி பர்ஸ் தவர விட்ட நபர் யார் என்று தேடிய போது மணி பர்ஸ்சில் உள்ள ஆதார் கார்டுடில் சேவூர் மணிகண்டன் என்பவரின் பெயர் இருந்தது.

இதையடுத்து அவரை ஆய்வாளர் தொடர்பு கொண்டு அழைத்து விசாரணை செய்ததில் அந்த மணி பர்ஸ் அவருடையது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

உடனே முழு விசாரணை முடிந்த பின் உரியவரிடம்  ஒப்படைக்கப்பட்டது. அதில் பணம் ரூ.6400/- மற்றும்  ஆவணங்கள் இருந்தது அதையும் ஒப்படைக்கப்பட்டது.

No comments

Thank you for your comments