காஞ்சிபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்:
வருகின்ற நகர்ப்புற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. பங்கேற்பு.
காஞ்சிபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மாளிகையில் நகர அவைத்தலைவர் எஸ்.சந்துரு தலைமையிலும் நகர கழக செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும்மான க.சுந்தர் கலந்துகொண்டு திமுக இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உறுப்பினர் சேர்த்தல் குறித்தும் தை 1ம் நாள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா சிறப்பாக நடப்பட வேண்டும் என்றும் கழக ஆக்க பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் கட்சி நிர்வாகிககளுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், மாநில தொண்டரணி செயலாளர் சுகுமாரன், மாநில நெசவாளரணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நகர கழக துணை செயலாளர்கள் வ.ஜெகன்நாதன், கன்னியம்மாள் தேவராசன், நகர பொருளாளர் சு.வெங்கடேசன், நகர கழக நிர்வாகிகள் வ.கந்தசாமி, எஸ்.சிகாமணி, எஸ்.சுகுமாரன், ஜி.குமரேசன், த.விஸ்வநாதன், எஸ்.மாமல்லன், ஏ.எஸ்.முத்துசெல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் சோபன்குமார், யுவராஜ்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எல்.அபுசாலி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments