ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு கடை பிடித்த பொதுமக்கள்
திருவள்ளூர், ஜன.9-
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பட்டாபிராம் திருமுல்லைவாயில், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் ஆங்காங்கே காவலர்களை வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சில இடங்களில் வாகனங்கள் குறைந்தே காணப்பட்டது. சில இடங்களில் உரிய ஆவணம் மற்றும் தலைக்கவசம் அனியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் சுற்றுபவர்கள் மருத்துவமனை மற்றும் மெடிக்கல் ஷாப் பால் திருமண நிகழ்ச்சிகள் இறப்பு போன்ற இடங்களுக்கு செல்ல தகுந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
திருமுல்லைவாயலில் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, தேவை இல்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என்று அறிவுரை களையும் வழங்கினர்.
மேலும், கடந்தாண்டில் கொரோனா வைரஸ் மட்டுமே இருந்தது, தற்போது ஒமைக்ரான் சேர்ந்து வருவதால் நாம் அனைவரும் மனித இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார். காவல்துறையினருக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்
No comments
Thank you for your comments