இன்ஸ்டாகிராம் விபரீதம்... பள்ளி மாணவி கர்ப்பம்... கல்லூரி மாணவனுக்கு போலீஸார் வலை வீச்சு
சென்னை:
சென்னைக்கு அருகாமையில் உள்ள அம்பத்தூர் அடுத்த பாடி தேவர் நகரில் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். இவர் முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமையன்று வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடனடியாக பெற்றோர்கள் தங்களுடைய மகளை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உங்கள் மகள் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதை தெரிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். இதன் பெயரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் விசாரித்தார் அதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் 20 என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு இன்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு சஞ்சய் பாடி வந்துள்ளார். அங்கிருந்து சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சென்னை முழுவதும் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. சில நேரம் இவர்கள் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது... இதனால் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் சஞ்சையை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்
No comments
Thank you for your comments