Breaking News

நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயற்பொறியாளர்களுடன் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா ஆலோசனை......

கோவை

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சார்ந்த நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயற்பொறி யாளர்களுடன் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா  ஆலோசனை......

கோயம்புத்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த நகராட்சி, ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் ப.பொன்னய்யா,  நகராட்சி நிர்வாகத்துறை டாக்டர்.ஆர்.செல்வராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் எம்.பிரதீப்குமார், பொறியியல் இயக்குநர் ஜி.வசந்தா, தலைமை பொறியாளர் ஏ.செங்குட்டுவன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா   தெரிவித்ததாவது,

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொரோனா நோய் தொற்று கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 

தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சளி தடவல் பரிசோதனை (RTPCR) மேற்கொள்ளுவதுடன், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதோடு எவ்வித உயிரிழப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

தொற்று அறிகுறியுடன் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் வருபவர்கள் விவரங்களை அவர்களிடமிருந்து பெற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

அரசின் அறிவிப்பிற்கிணங்க, தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதப்படுத்திட வேண்டும். நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து தனிமைப் படுத்துவதுடன் அவர்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்று பரவா வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுபோலவே, வளர்ச்சித் திட்டப்பணிகளிலும் அலுவலர்கள் மெத்தனம் காட்டக்கூடாது, நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைப்புத் திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும். 

மேலும், செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டப்பணிகள், நடைமுறைபடுத்த வேண்டிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அலுவலர்கள் விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

அதுபோல, அடிப்படை சாலைப்பணிகள், தெருவிளக்குகள், பூங்காக்ககள் உருவாக்குவது மற்றும் பராமரிப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.

முன்னதாக மேட்டுப்பாளையம் வட்டம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.91.70 கோடி மதிப்பீட்டில் அமையப்பெற்று வரும் நகராட்சிக்கான பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் தலைமைச் செயலாளர் 80சதவிகிதம் முடிவுற்ற பாதாள சாக்கடைத்திட்டபணிகளை வருகின்ற மார்ச் - 22க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், முடிவுற்ற பகுதிகளிலெள்ளாம் பாதாள சாக்கடையின் வீட்டிணைப்பு பணியினை முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவறுத்தினார். 


தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடிவுற்ற பகுதிகளில் (மணிநகர்) சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டதுடன் சாலையின் தரத்தினை துளையிட்டு பரிசோதித்து பார்த்தார். 

தொடர்ந்து, ரூ.779.86 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3வது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சுரங்கம் (டனல் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கூடுதல் தலைமை செயலாளர்  குறித்த காலத்திற்கு முன்னதாகவே பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments