Breaking News

பராசக்தி கோயிலை சுற்றி நடைபாதையில் தூய்மைப் பணி

கடலூர், ஜன.9-

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தப்பட்டு பெண்ணை நகரில் பூங்கா மற்றும் பராசக்தி கோயிலை சுற்றி நடைபாதையில் தூய்மையற்ற நிலையில் இருந்த நடைபாதையை தூய்மை இந்தியா திட்டம் பெண்ணை நகர் மற்றும் அச்சம் தவிர் நுகர்வோர் அமைப்பு சேர்ந்து பூங்கா மற்றும் பராசக்தி கோவில்களை சுற்றி கஞ்சமலை தலைமையில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். 

துப்புரவு தூய்மை பணியில் வெள்ள பாக்கம் கிராம சேனா தர்மராஜ், முத்துகிருஷ்ணன், வேல்முருகன், நுகர்வோர் அமைப்பின் உறுப்பினர்கள் செல்வராஜ், கம்பவுண்டர் செல்வராஜ், தில்லைக் கோவிந்தன், எத்திராஜ், பாலசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தூய்மை துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

1 comment:

Thank you for your comments