Breaking News

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையம் சார்பில் பயிலரங்கம்

கோவை :

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையம் சார்பில் "அறிவுசார் காப்புரிமை தேடுதல் மற்றும் குறிப்புரை வரைவு” என்ற தலைப்பில் பயிலரங்கம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற்றது.

காப்புரிமை பெறும் தொடர் செயல்முறையில் அதன் தொடர்பான காப்புரிமைகள் பற்றிய தேடுதலும், காப்புரிமை பற்றிய குறிப்புரை எழுதுவதும் இன்றியமையாதது ஆகும். 

இது தொடர்பான பயிலரங்கம் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கு நல்ல பயிற்சியை அளிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும் மேலும் காப்புரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், வளரும் ஆராய்ச்சியாளர்களுக்கு காப்புரிமை பற்றிய அறிவை மேம்படுத்த உதவும் என்ற சீரிய எண்ணத்தொடும் இந்த மெய்நிகர் (online Virtual) பயிலரங்கம் அரசின் கொரோன விழிப்புணர்வு வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

100-கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்த பயிலரங்கத்தின் துவக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பாரதியார் பல்கலைக்கழக அறிவுசார் காப்புரிமை மையத்தின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் த.பரிமேலழகன் வரவேற்புரை ஆற்றினார். 

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா. முனைவர் காளிராஜ் அ தலைமை ஏற்று பயிலரங்கினை துவக்கிவைத்து துவக்க உரை ஆற்றினார். இந்திய காப்புரிமை அலுவலகதின் சென்னை மண்டல பிரிவின் காப்புரிமை துணைக் கட்டுப்பாட்டாளர் அஜித் மணியன் பயிலாங்க நிகழ்வின் முதன்மை உரை ஆற்றினார். 

கோவை ஐவியுக்தி வணிக தீர்வுகள் நிறுவனதின் நிர்வாக பங்குதாரர் முனைவர். அருண்குமார், பயிலரங்க நிகழ்வின் வாழ்த்துரை வழங்கினார்.

துணை வேந்தர் பேரா. முனைவர் காளிராஜ் அவர்கள் தமது உரையில் உலகில் , நவீன ஒவ்வொரு நாட்டின் வர்த்தகத்திலும் அறிவுசார் சொத்துரிமை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. 

வலுவான அறிவுசார் சட்டங்களின் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த பங்களிப்பை காக்க முடியும் . அறிவுசார் சொத்து என்பது கண்டுபிடிப்பாளரின் சிந்தனையை எவராலும் விரைவாக நகலெடுக்கக்கூடிய அருவமான சொத்துக்களுக்கான பாதுகாப்பு ஆதாரங்களில் ஒன்றாகும். அறிவுசார் குற்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டன. எனவே அறிவுசார் சொத்துக்களை காப்பது இன்றியமையாதது பல்கலைக்கழத்தின் ஆகும், இதற்கான அறிவுசார் காப்புரிமை விழிப்புணர்வுகளை இதுபோன்ற சீரிய மையம் முயற்சிகளில் பாரதியார் எடுத்துவருகிறது. அதற்கான பயிலரங்கங்கள் இளம் ஆராய்ச்சியாளர்களிடம், பேராசிரியர்களிடமும் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் அறிவுசார் காப்புரிமை மையம் சார்பில் 20 காப்புரிமைகள் பல்கலைகழகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு 6 காப்புரிமைகள் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகள் மற்றும் பதிப்புரிமைகளைக் பாரதியார் பல்கலை கழகம் பெறுவதன் அதன் தரம் சர்வதேச அளவில் உயர்கிறது என்றார். 

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அறிவுசார் காப்புரிமை மையம் சார்பில் ஆண்டிற்கு இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றின் பிரதியை துணைவேந்தர் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார். இந்திய காப்புரிமை அலுவலகதின் சென்னை மண்டல பிரிவின் காப்புரிமை துணைக் கட்டுப்பாட்டாளர் .அஜித் மணியன்  தனது முதன்மை உரையில் எவ்வாறு காப்புரிமைகள் தொடர்பான தகவல்களை தேட வேண்டும் என்றும் காப்புரிமைக்கான குறிப்புரை தயாரித்தல் தொடர்பான பயிற்சினை வழங்கினார்.

இதனை தொடர்ந்து கோவை ஐவியுக்தி வணிக தீர்வுகள் நிறுவனதின் நிர்வாக பங்குதாரர் முனைவர்  அருண்குமார், தனது உரையில் ஒரு நாட்டில் அறிவியல் மற்றும் உற்பத்தியின் வளர்ச்சியில் காப்புரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், சமீபத்திய ஆண்டுகளில் கண்டுபிடிப்புகள் மற்றும் பிற தொழில்துறை சொத்து பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது அதிகரித்து உள்ளது. கல்விநிறுவனங்கள் காப்புரிமை பெறுவதோடு நின்றுவிடாமல் அதனை மேலும் வணிகமயமாக்கல் பற்றிய சிந்தனைகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சமூகத்திற்கும், பல்கலைக்கழக வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார் .

No comments

Thank you for your comments