மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கம்...
மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தாய்மொழி தமிழுக்காகத் தங்கள் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சரவணம்பட்டியில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள், வட்ட கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments