Breaking News

காஞ்சிபுரம் தேவாலயங்களில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

 காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் தேவாலயங்களில் புத்தாண்டு  விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


உலகமெங்கும் ஜனவரி  1ஆம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் தேவாலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறக்கின்ற புதுவருடத்தில் நோய் நொடிகள் நீங்கி கோரோனா  நோய் தொற்றிலிருந்து உலக மக்கள் முற்றிலுமாக மீண்டுவர சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு வெகு சிறப்பாக இந்த புத்தாண்டை வரவேற்றனர்.

பின்னர் கேக் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments

Thank you for your comments