ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காஞ்சி காமாட்சியம்பாளை பக்தர்கள் தரிசனம்...
காஞ்சிபுரம் :
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காஞ்சி காமாட்சியம்பாளை தங்களது குடும்பத்தாருடன் பக்தர்களும்,பொது மக்களும் தரிசித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு 2022 வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாகவும்,இந்த வருடத்தின் முதல் நன்னாளில் இறை வழிபாடோடு துவங்கிட காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு தங்களது குடும்பத்தாருடன் பக்தர்களும்,பொது மக்களும் என ஏராளமானோர் வருகைப் புரிந்து காஞ்சி காமாட்சியம்பாளை தரிசித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் முகக் கவசங்கள் அணிந்துக்கொண்டும்,கிருமி நாசினி,உடல் வெப்ப நிலை பரிசோதனை ,சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து பக்தர்களும், பொது மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments