ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி இணைந்து 75 பெண்களுக்கு தொழில் மேம்பாட்டுப் பயிற்சி
காஞ்சிபுரம்:
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி காஞ்சிபுரம் வேதியியல் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்துடன் இணைந்து ஐந்து நாட்கள் இலவச பயிலரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஐந்தாம் நாள் அன்று பழைய சீவரம் கிராம மக்களுக்கு தொலைநோக்கு பார்வை மூலம் வாழ்க்கையை வடிவமைத்தல் பற்றி ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக தலைவர் டாக்டர் . கல்பனா சங்கர், நிறுவன தலைவர் சீனிவாசன் மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி , கல்லூரி முதல்வர் முனைவர் வே. ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனைப் படியும் ,
ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜோசப் ராஜ், பச்சைப்பன் ஆடவர் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.தமிழரசு மற்றும் முனைவர் மு. ரேணுகாதேவி அவர்களின் வழிகாட்டுதலின் படியும்
ஒரு நாள் தொழில் மேம்பாட்டு பயிற்சி செல்வி. ஸ்வப்னா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பெண்களுக்கு பயிற்சி செய்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட்டது.
பயிற்சி ஏற்பாடுகளை ஹேண்ட் இன் ஹேண்ட் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேலாளர் திரு . ராமசாமி , திருமதி. பிரபாவதி , காந்தா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments