நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் கோவையில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் 4-வது மண்டல தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகம் தலைமை தாங்கினார். இதில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் என். தினேஷ் பாபு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கோ. மோகன் குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் என். தினேஷ் பேசினார். இதில் மாணவர்களை தொழில்முனைவோராக மாற்றுவதில் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகளை விவரித்து பேசினார்.
மேலும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் காப்புரிமை பெற்று எவ்வாறு அதனை தொழிலாக மாற்றுவது என்பது குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியில் தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் சி.அல்லிமுத்து நன்றியுரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்ரீ நந்தா அறக்கட்டளை செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் முனைவர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள்.
No comments
Thank you for your comments