அபாய நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்... அச்சத்தில் பொதுமக்கள்...
காட்பாடி :
காட்பாடி கே.வி.குப்பம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சில நாட்களாக பொதுமக்கள் அலுவலகத்திற்கு வர மிகவும் அச்சப்படுகின்றனர். ஏனென்றால் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
தினமும், வருவாய் ஆய்வாளரை பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் சந்திக்கும் இடமாக திகழ்வது வருவாய் ஆய்வாளர் அலுவலம்... இவ்வாறு மக்கள் அதிகம் பயண்பெறும் இடமான வருவாய் ஆய்வாளர் அலுவலகமே பாதுகாப்பின்றி இருப்பது மிகவும் வெட்ககேடான ஒன்று என்று சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களையும், அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர்களையும் மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவேண்டும் என்றும், இல்லையெனில் அபாயகரமாக உள்ள கட்டடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக அர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments