17வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளுர், ஜன.3-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் பூண்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, நேற்று (02.01.2022) நடைபெற்ற 17-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது,
தமிழக அரசின் உத்தரவின்படி, மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன் பொருட்டு, திருவள்ளுர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 670 தடுப்பூசி மையங்களில் 2680 பணியாளர்கள் மூலம் நடைபெறுகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த 18,88,400 பயனாளிகளில் இதுவரை நடைபெற்ற 16 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் நாள்தோறும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் முதல் தவணையாக 16,12,932 (85%) நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 10,39,424 (55%) நபர்களுக்கும் என மொத்தமாக 26,52,356 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 16 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 11,08,068 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ளவர்களில் முதல் தவணையாக 2,75,468 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 2,64,685 நபர்களுக்கும், நடைபெறும் முகாம்கள் மூலமாகவும், இனிவரும் நாட்களிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் நமது மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத தகுதிவாய்ந்த நபர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இம்முகாம்களில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.கே.ஆர்.ஜவஹர்லால், உள்ளாட்சி பிரிதிநிகிள், சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments