04-01-2022 அன்று அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்கை முகாம்
ஈரோடு, ஜன.3-
தமிழ்நாடு 18 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானம் உள்ளிட்ட 18 வகையான அமைப்புசாரா தொழிலாளர்களை தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 60 வயதிற்கு உட்பட்டோர் உறுப்பினராக சேரலாம்.
இதில் பதிவுசெய்து கொண்டவர்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்தல் செய்து கொள்ளவேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் உள்ளிட்ட 18 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்பவர்களுக்கு மகப்பேறு, திருமணம், இரு குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை (6 ம் வகுப்புமுதல் பட்ட மேற்படிப்பு வரை), ஒருமுறை கண்கண்ணாடி, இயற்கைமரணம், விபத்துமரணம், 60 வயதுநிறைவு பெற்றபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 18 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சென்டெக்ஸ் அருகில் உள்ள கௌரி கல்யாண மண்டபத்தில் 4.1.2022 காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் பதிவுசெய்வதற்கு
1.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி
2.அசல் ஆதார் அட்டை
3.அசல் குடும்பஅட்டை
4.பாஸ்போர்ட்சைஸ் போட்டோ
5.வங்கிகணக்குபுத்தகம்
6.வயதிற்கான ஆவணம் (குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், பள்ளிசான்றிதழ், அரசு மருத்துவர் சான்று என இதில் ஏதேனும் ஒன்று)
ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக தெரிவிக்கப்படுகிறது. சென்னிமலைபகுதியில் உள்ளதொழிலாளர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்குபெற்று பயன் பெறுமாறு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) சு.காயத்திரி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments