Breaking News

ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் மாவட்டம்

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது யஸ்வந்த்பூர்-ஹத்யா எக்ஸ்பிரஸ் ( எஸ்வந்த்பூரிலிருந்து ஹாத்யா செல்லும்) ரயிலில் சோதனை செய்தபோது அதில் D1  கோச்சில் கழிவறை அருகே 3 பைகளில் 15 கிலோ  கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்பாடி பகுதியில் ரயில்களிலும் பஸ்களிலும் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

No comments

Thank you for your comments