15 முதல் 18 வயதுடையவர்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி
வேலூர், ஜன.3-
வேலூர் மாட்டத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள் இன்று (03-01-2022) முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 03-01-2022 முதல் கோவிட் தடுப்பூசியினைச் செலுத்திக்கொள்ளலாம்.
· கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும்.
· Co&Win Portalல் முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது நேராக தடுப்பூசி மையங்களில் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐடிஐ நிறுவனங்களிலும் வரும் 03-01-2022 முதல் 15-18 வயதுடையர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தினால் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments