Breaking News

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சிநேயர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு வழிபாடு

நாமக்கல், ஜன.3-

அனுமன் ஜெயந்தியையொட்டி உலக புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்பட்டன.

ஆஞ்சநேயர் கோவில் வளாகம் முழுவதும் டன் கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று ஆய்வுக்காக நாமக்கல் வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆஞ்சிநேயர் கோவிலுக்கு சென்று வடைமாலை அணிவித்து பயபக்தியுடன் தரிசனம் செய்தார். 

இந்த நிகழ்வில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் குமார் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நைனாமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 7.1 கிலோ மீட்டர் மலைப்பாதை ரூ 13.05 கோடி செலவில் சீரமைக்கும் பணியை  

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனுடன்  ஆய்வு மேற்கொண்டார்.


No comments

Thank you for your comments