எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை...
வேலூர் மாவட்டம் காட்பாடி அக்ராவரம் 5-வது வார்டு சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாட்டாண்மை கே.பி.ஆனந்தன், வேலூர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எ.அமர்நாத், சிலம்பாட்ட குழு பொறுப்பாளர் மாஸ்டர் கருணாகரன், சங்கர் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments