100 வயது மூதாட்டி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு
காஞ்சிபுரம், ஜன.14-
காஞ்சிபுரத்தில் வசித்து வரும் 100 வயது ரா.மாணிக்கம்மாள் என்ற மூதாட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு தற்போது கொரோனா பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ளது எஸ் எஸ் கே நகர். இப்பகுதியில் வசிப்பவர் டாக்டர் சிவசண்முகம் (80) இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரதுது மனைவி சி.ராஜகுமாரி(68) மற்றும் அவரது அம்மா மாணிக்கம்மாள்(100) உடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூவரூம் கொரோனா தடுப்பூசிக்கு சென்று உரிய நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு தவணைகளும் செலுத்தி கொண்டு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய மாநில அரசுகள் 60 வயதை கடந்த முதியவர்கள், முன் கள பணியாளர்கள் உரிய கால அவகாசத்தில் தங்களது பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.
இதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொண்டு குறித்த நேரத்தில் சென்று ஊசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் டாக்டர் சிவசண்முகம் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் நேற்று நான்கு மணிக்கு ஊசி செலுத்தி கொள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்பதிவு செய்து கொண்டதன் பேரில் அவர்கள் மூவருக்கும் பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டது.
திருமதி மாணிக்கம்மாள் பூஸ்டர் ஊசி செலுத்தி கொள்ள காரிலிருந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஊன்றுகோல் கூன்றி நடந்து வந்து செவிலியரிடம் மகிழ்ச்சியாக பேசி ஊசி சிக்கிக் கொண்டார். தீவிர ஐயப்ப பக்தரான இவர் ஊசி செலுத்தி கொள்ளும்போது சரண கோஷங்கள் பாடி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொண்டார். இவர் முதல் தவணை தடுப்பூசி கடந்த ஆண்டு மார்ச் மாதமும், இரண்டாவது தடுப்பூசி ஏப்ரல் இறுதியில் செலுத்தி கொண்டார் .
பலர் மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை ஊசி செலுத்தி கொள்ளாத நிலையில் நூறு வயது எட்டிய மாணிக்கம்மாள் பாட்டி இரு தவணைகளில் செலுத்தி கொண்டு போஸ்டர் ஊசிகளை செலுத்தி கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மகிழ்ச்சியும் மற்றும் ஆச்சரியத்தை அளித்தது.
No comments
Thank you for your comments