சென்னிமலை எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் விழா
ஈரோடு:
சென்னிமலை எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள எம் பி நாச்சிமுத்து எம் ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெற்றது.
இதில் 250 ற்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தனியார் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு 154 மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே பணி நியமன ஆணையை வழங்கினர்.
இந்த பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் கல்லூரி தாளாளர் "பாரத் வித்யா சிரோமணி" டாக்டர். வசந்தா சுத்தானந்தன் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கி மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
இதில் முதல்வர் முனைவர் எம் ரமேஷ், ஈரோடு ஸ்ரீ ஜுவல்லர்ஸ் எம் வி தெய்வசிகாமணி, வேலைவாய்ப்புத் துறை அலுவலர் மோகன் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களை பாராட்டினர்.
No comments
Thank you for your comments