மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் (DISHA)
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இன்று (24.12.2021) வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அக்குழுவின் தலைவர் டி.ஆர்பாலு நடைபெற்ற கூட்டத்தில் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அரசு அலுவலர்களையும் உள்ளாட்சி பிரதிநிதிகளையும் வரவேற்றார். பின்பு அரசு அலுவலர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புகள் குறித்து பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் டி.ஆர்.பாலு வழங்கி துறை ரீதியான கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, கு.செல்வபெருந்தகை, சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments