தந்தை பெரியார் 48 வது நினைவு நாள் அனுசரிப்பு.. திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் 48 வது நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் க சுந்தர், கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
உடன் காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்டு கே ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், க.குமணன் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
No comments
Thank you for your comments