Breaking News

போலியான customer care அழைப்பு... வங்கி கணக்கில் பணம் திருட்டு... சைபர் கிரைம் விரைந்து நடவடிக்கை..

வேலூர்:

வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் ஜாபராபேட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் ஆவடி டேங்க் பேக்டரியில் டெக்னிஷியனாக பணிபுரிந்து வருகிறார். 


இவர் தனது  SBI credit card தானாகவே புதுப்பிக்கப்பட்டு புதிய கார்டு வந்துள்ளதாகவும், அதனை cancel செய்ய முற்பட்டபோது, போலியான customer care  எண்ணிலிருந்து அழைப்பு வந்து அனைத்து வங்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்த உடன் , தனது கணக்கிலிருந்து ரூபாய். 91,278/- எடுக்கபட்டுவிட்டதாகவும் , உடனே வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். 

புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசார் பணத்தை விரைவாக மீட்டனர். 


மீட்கப்பட்ட பணம் ரூ.91,278/- உரியவரிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.


No comments

Thank you for your comments