காங்கிரஸ் பேரியக்கத்தின் 137 ஆண்டுவிழா... பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 137 ஆண்டுவிழா பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் நாதன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பிரம்மாண்டமாக கட்டியும் 137 அடி காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிரமாண்டமான கேக் வெட்டி விழாவைத் துவக்கினார்.
இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட பொதுச்செயலாளர் காஞ்சி காமராஜ் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தனர்.
இதில் மாநில நிர்வாகிகள் பத்மநாபன். சங்கரலிங்கம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமங்கலி சீனிவசன் பரமசிவம் பிரபாகரன் . வட்டாரத் தலைவர் அம்பி பிச்சாண்டி மாவட்ட துணைத்தலைவர்கள் பூக்கடை மணிகண்டன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் அரங்கநாதன் நகர் அன்பு. இளைஞரணி யோகானந்தம். சாதிக் பாஷா. உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments